அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது பசுமை புரட்சி கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பசுமை புரட்சி கட்சி அ.தி.மு.கவை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.
மக்களிடையே ஜாதி, மதங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1997ம் ஆண்டுதுவங்கப்பட்டது பசுமை புரட்சி கட்சி.
இந்த கட்சியினர் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இக் கட்சியின் மாநில தலைவர் கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சிதமிழக்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்.
இந்த மாதம் 7ம் தேதி அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவுள்ளோம். ஆனால் அப்போதுநாங்கள் எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்க மாட்டோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications