35 கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி
சென்னை:
தமிழகத்தில் 35 கட்சிகள் சேர்ந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.
புரட்சித் தலைவர் அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகிலஇந்திய மனித உரிமைக் கழகம், உலக தமிழர் பேரவை, நெல்லை ஜெபமணி ஜனதா கட்சி உள்பட 35 கட்சிகள்இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜாராம் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜா முகமது,ஜி.ஏ.வடிவேலு, இளையபெருமாள், டாக்டர் ஜனார்த்தனம், டாக்டர் சேதுராமன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
திமுக, அதிமுக கட்சிகள் மேல் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். அதனால் நாங்கள் மாற்று அணிஅமைக்கிறோம். எங்கள் கூட்டணி ஊழலுக்கும், மதவாதத்துக்கும் எதிரானதாகும்.
மக்கள் மத்தியில் எங்கள் கட்சிக்கு ஆதரவு உள்ளதால் நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சின்னமான டிராக்டர் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.எங்கள் முன்னணி சார்பில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது.
சென்னை சீரணி அரங்கில் வரும் 16 ம் தேதி எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.அப்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்றனர்.












Click it and Unblock the Notifications