கட்சி மாறியாக ஆகி களங்கப்பட்ட தமிழ்க்குடிமகன்
சென்னை:
கட்சி மாறியாக ஆகி களங்கப்பட்டு விட்டீர்களே என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு தமிழ்அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுகவுக்கு மாறி சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்தமிழ்க்குடிமகன். தற்போது திமுகவைச் சேர்ந்த சில தமிழறிஞர்கள் தமிழ்க்குடிமகனுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
கவிஞர் அப்துல் ரகுமான், மேத்தா, பேராசிரியர் பொன்.செல்வகணபதி, கருவை.பழனிச்சாமி, முனைவர்வேலுச்சாமி, மா.சு.சம்பந்தன், வா. சேதுராமன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
தமிழ்க்குடிமகனின் அறம் பிறழ்ந்த செயலால் தமிழ் உலம் நாணித் தலை குனிந்து நிற்கிறது. கேட்ட தொகுதிகிடைக்கவில்லை என்பதால், கட்சி மாறுவதும், ஏற்றம் கொடுத்த கலைஞரை தூற்றுவதும் எந்த வகையிலும்நியாயமற்றதாகும்.
தமிழ், தமிழன் என்று புழங்குவதெல்லாம் பதவிக்காகத்தான் என்று பிறர் பரிகசிக்கும் நிலையை அவர் உருவாக்கிவிட்டார்.
தமிழ்ப்பற்றைக் காட்டி பதவியைக் கைப்பற்றிய தமிழ்க்குடிமகன் போன்றோர், கொண்ட கொள்கைகளுக்கும் குழிதோண்டியது அநாகரீகமானது.
தன்மானத்திற்கு ஊறு நேர்ந்தது என்று கருதியிருந்தால், அரசியலிலிருந்து விலகி, தமிழ்ப் பணிக்கே தன்னைஅர்ப்பணித்திருக்கலாம். அவ்வாறின்றி, கட்சி மாறியாக ஆகி களங்கபப்ட்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications