பா.ஜ.க.வுக்கு திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிகள்
திருச்சி:
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியும், ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியும் பாரதிய ஜனதா கட்சிக்குஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் பலர் கட்சித் தலைமையிடம் மனு செய்தார்கள்.
பாஜகவில் தொடர்ந்து 3 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படுவதுவழக்கம்.
இந்த வழக்கத்தை உடைத்தெறிந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் கட்சியில் சேர்ந்தவுடன்எம்.பி.தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.
ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவைத் தொடர்ந்து தமிழக சட்டசபைத் தேர்தலுடன் திருச்சி எம்.பி.தொகுதிக்கானஇடைத்தேர்தல் நடக்கிறது.
திமுக கூட்டணியில் திருச்சி லோக்சபா தொகுதி மீண்டும் பாஜவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கிட்டிகுமாரமங்கலத்திற்கு இத்தொகுதி ஒதுக்கப்படுமென கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
ஆனால் கட்சி தலைமை இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகர் எம்.என்.நம்பியார் மகனான சுகுமாரன்நம்பியார், கிட்டி குமாரமங்கலம் உள்ளிட்ட 3 பேரின் பெயர்களை பரிசீலித்து வருகிறது.
இதே போன்று ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலத்தின் சகோதரியும், தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரக்ருதியின் உரிமையாளருமான லலிதாகுமாரமங்கலம்தான் போட்டியிட சரியான நபர் என கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.