புத்தாண்டில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் கண்ணப்பன்
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்பெயர்கள் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் எஸ்.கண்ணப்பன்திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து கண்ணப்பன் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புத்தாண்டுக்குப் பிறகு மக்கள் தமிழ்தேசம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபின் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில்சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அப்போது திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக மக்களிடம் ஓட்டு கேட்பேன்.
திமுக ஜாதிக்கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்கிறது என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுவது தவறு.
ஏனெனில் அதிமுகவில் இரண்டு ஜாதிக்கட்சிகள் உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக முன்னேற்றக்கட்சியும்தான் அவைகள் என்றார் கண்ணப்பன்.
யு.என்.ஐ.