யாருடன் கூட்டணி? குழப்பத்தில் த.ரா.கா.
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு, கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திதலைமையில் கூடி சட்டசபைத் தேர்தலில் தங்களின் நிலை குறித்து விவாதித்தது.
இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவதா? யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து எந்த முடிவும்எடுக்கவில்லை. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பதில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியில் இன்னும்குழப்பமே நீடிக்கிறது.
மேலும் இந்தக் கூட்டத்தில் ஏப்ரல் 13 ம் தேதி மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி அனைத்து மாவட்டத்தலைவர்களின் கருத்தையும் கேட்டறியத் திட்டமிடப்பட்டது.
மாவட்ட வாரியாக கட்சி பிரமுகர்களின் கருத்தைக் கண்டறிந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக ராஜீவ் காங்கிரஸ்கட்சி, சமீபத்தில் கூட்டணியிலிருந்து விலகியது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.