ஆள்மாறாட்டம் செய்த கேரள வாலிபர் கைது
கோவை:
ஆள்மாறாட்டம் செய்து சவூதியிலிருந்து கோவை வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (23). இவர் சார்ஜாவில் வேலைபார்த்து வந்தார். அவர் வேலை பார்த்த கம்பெனியினர் அவரது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தராமல் வைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வர சம்சுதீன் நினைத்தார். எனவே, சவூதியில் வேலை பார்த்து வரும் அஜீஸ்குமார்என்பவரது முகம் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருக்கும். இதைப் பயன்படுத்தி ஊருக்குச் செல்ல அஜீஸ்குமார்அனுமதியளித்தார். இந்த பாஸ்போர்ட்டை ஊருக்கு சென்றதும் தனக்கு அனுப்பி வைக்குமாறு அஜீஸ் கூறியுள்ளார்.
அஜீஸ்குமாருக்கு இந்த பஸ்போர்ட் கிடைத்ததும், அவர் அங்கிருந்து வந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். சார்ஜாவிமானம் மூலம் கோவை வந்த சம்சுதீன், சுங்க இலாகா அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.
பாஸ்போர்ட் சோதனையின்போது அதிகாரிகளின் கேள்விக்கு முறையாகப் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்தஅதிகாரிகள், பாஸ்போர்ட்டை சோதனை செய்து போட்டோவில் வித்தியாசத்தைக் கண்டு பிடித்தனர்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையத் துவக்கியுள்ளனர். போலி பாஸ்போர்ட்வைத்திருந்த சம்சுதீனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications