நிதியமைச்சகம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு
டெல்லி:
டெல்லியில் மத்திய நிதியமைச்சக அலுவலக வாசலில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வெடிகுண்டுகண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நிதியமைச்சகம் உள்பட ராஷ்டிரபதி பவன் மற்றும் பிரதமர் அலுவலக வாசல்களில் தீவிரசோதனை மேற்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மத்திய நிதியமைச்சக வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தவெடிகுண்டை ராணுவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
இதையடுத்து, தலைநகரில் உள்ள மத்திய உள்துறை, ராணுவ, கடற்படை, வெளியுறவுத்துறை, நிதித்துறை,அமைச்சகங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சக வாசலில்வழக்கம் போல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் விதத்தில் டிபன் பாக்ஸ் ஒன்றுகிடந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ராணுவ வீரர்களும் உதவிக்குஅழைக்கப்பட்டார்கள்.
வெள்ளைநிறத் தாளில் சுற்றப்பட்டிருந்த இந்த வெடிகுண்டு 3.75 கிலோ எடையுடன் இருந்தது. இது டிபன் பாக்ஸில்வைக்கப்பட்டிருந்தது. அதில் இரண்டு பேட்டரிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் மற்றும் டைம்பீஸ் ஒன்றும்வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications