தி.மு.க. கூட்டணியில் இணைந்தது மூ.மு.க
சென்னை:
தேவர் இன மக்கள் அதிகம் உள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் புதன்கிழமை திமுக கூட்டணியில் இணைந்தது.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதியை வழங்கியுள்ளது திமுக தலைமைக்கழகம்.
முன்னதாக, மூவேந்திர முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் புதன்கிழமை காலை திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று சந்தித்து மூவேந்தர் முன்னேற்றக்கழகம் திமுக கூட்டணியில் இணைய விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து முறையாக திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் இணைந்தது. மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இருதலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இதற்கிடையே, தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ள திமுககூட்டணியில் தேவர் இன மக்கள் அதிகம் உள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் இணைந்தது பெரிய திருப்பமாகஅமைந்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகம் வாழும் தேவர் இன மக்கள் எப்போதும் அதிமுக கூட்டணிக்கேஆதரவு அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில்இணைந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications