திமுகவுக்காக சரத்குமார் - ராதிகா ஜோடி பிரசாரம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்காக, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதிகள் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.
கடந்த தேர்தலில் திமுகவுக்காக தனித்தனியாகப் பிரசாரம் செய்த ராதிகாவும், சரத்குமாரும் இந்தத் தேர்தலில்இணைந்து பிரசாரம் செய்கிறார்கள்.
தனித்தனியாக பிரசாரம் செய்தால் நிறைய இடங்களில் பிரசாரம் செய்யலாம் என்று தலைமைக் கழகத்திடம்கூறியிருக்கிறார்கள் இவர்கள். ஆனால் அவர்களோ நீங்கள் இருவரும் ஜோடியாக சென்று பிரசாரம்மேற்கொண்டால்தான் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
இதனால் ராதிகாவும், சரத்குமாரும் சேர்ந்து ஏப்ரல் 15 ம் தேதி முதல் திமுகவுக்காக பிரசாரம் செய்யத்தொடங்குகிறார்கள். இதே போல் நெப்போலியன், சந்திரசேகர், தியாகு என்று நட்சத்திர பட்டாளமே தேர்தல்பிரசாரம் செய்யவுள்ளது.












Click it and Unblock the Notifications