For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானத்திலிருந்து பாகிஸ்தான் ஆட்சியாளரை வாழ்த்திய வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

டெஹ்ரான்:

பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புகிறோம் என ஈரான் செல்லும் வழியில் பாகிஸ்தான் மேல்விமானம் பறந்து கொண்டிருந்த போது பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

பிரதமர் இந்தியா - ஈரானிடையேயான நட்புறவை பலப்படுத்தும் விதமாக 4 நாள் பயணமாக பிரதமர் வாஜ்பாய்செவ்வாய்க்கிழமை ஈரான் கிளம்பிச் சென்றார்.

ஏர் - இந்தியா விமானத்தில் செல்லும் போதுபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாராஃப்புக்குதெரிவித்துள்ள செய்தியில் வாஜ்பாய் கூறுகையில், பாகிஸ்தான் மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். பாகிஸ்தானினுடன் நட்புறவையே விரும்புகிறோம்என்றார்.

ஒரு நாட்டின் தலைவர் வேறு நாட்டுக்கு செல்லும் போது இது போல் கூறுவது வழக்கமானதுதான். ஆனால்இந்தியா - பாகிஸ்தானிடையே சுமூகமான சூழ்நிலை இல்லாத சமயத்தில் இது போன்று இந்திய பிரதமர்பாகிஸ்தான் உறவு குறித்து கூறியது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X