அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குழந்தைவேலு மரணம்
கோவை:
தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் குழந்தைவேலு கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் குழந்தைவேலு. இவர் எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர். மேலும் ஜெயலலிதாஆட்சி காலத்தில் எம்.பியாகஇருந்தார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை தனது காரில் உடுமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். அப்போது மழை தூறிக் கொண்டிருந்தது.
கார் கிணத்துக்கடவு அருகே வந்த போது கட்டுப்பாடு இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்த குழந்தைவேலு உடனே கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 7.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.