எய்ட்சில் தமிழகத்திற்கு 3 வது இடம்
சேலம்:
எய்ட்ஸ் நோய் பாதிப்பில் தமிழகம் 3 வது இடம் வகிக்கிறது என தமிழ்நாடு எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு துறைஅதிகாரி லட்சுமிபாய், அரவிந்த் ஆகியோர் தெரிவித்தனர்.
சேலத்தில் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாலியல் தொழில் புரியும்பெண்களிடையேயான எய்ட்ஸ் கட்டுப்பாடு செயல்பாடு அனுபவ பகிர்வு குறித்த கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் லட்சுமி பாய் மற்றும் அரவிந்த்ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாலியல் தொழில் புரியும் பெண்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ட்ஸ்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 40 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், எச்.ஐ.வி.,கிருமி பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையின்அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
இப்போது 3ம் இடத்திற்கு மாறியுள்ளது. ஆந்திரா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இந்திய அளவில்தமிழகத்தில் 2 சதவீத எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் உள்ளனர். தமிழகத்தில் 800 முதல் 1000 பேர் உள்ளனர்.
சேலம், நாமக்கல் பகுதியில் எய்ட்ஸ் நோய் அதிகரித்துள்ளது. இங்குள்ள லாரி டிரைவர்கள் மற்றும்பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு 15 ஆயிரம் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இவை, தற்போது 40 ஆயிரம்கடைகளில் விற்பனையாகின்றன என்றனர்.