For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் வியாபாரி மனைவி கொலை: குற்றவாளி கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ராஜஸ்தான் வியாபாரியின் மனைவியை கொன்ற கொலையாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த துங்கார் சந்த் ஜெயின் என்பவர் மதுரையில் வியாபாரம் செய்து வந்தார் இந்த மாதம் 2ம்தேதி ராஜஸ்தான் வியாபாரியின் மனைவியான சுசில்தேவி (வயது 37) என்பவர் பட்டபகலில் கொலைசெய்யப்பட்டார். வீட்டிலிருந்து ரூ 20,000மும், 33 சவரன் நகையும் திருடிச் செல்லப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக மாரி என்கிற முத்துமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மதுரைரெளடி என்பது குறிப்பிடத்தக்கது.

சுசீலாதேவியை, அவரது கணவரிடம் வேலை செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட காலுராமும் , சமீபத்தில்சிறையிலிருந்து விடுதலையான சேட் டும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

முத்துமாரியை போலீசார் விசாரணை செய்தபோது, தன்னை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய துங்கார் சந்த்ஜெயின் மீது கோபம் கொண்ட காலுராம்தான் இந்த கொலைக்கு காரணம்.

ரவி என்பவர் இந்த கொலைக்கான திட்டத்தை போட்டவர் ரவி என்பவர் சிறையில் இருந்த சேட் சுரேஷ்என்பவருடன் சேர்ந்து கொலைக்கான திட்டத்தை போட்டார் எனவும் கூறினார் என போலீசார் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X