ஜெயலலிதா போட்டியிடலாமா? தேர்தல் கமிஷன் இன்று முடிவு
டெல்லி:
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடலாமா கூடாதா என்பது குறித்து தலைமைத் தேர்தல் கமிஷன்இன்று (சனிக்கிழமை) முடிவெடுக்கவுள்ளது.
டான்சி நில ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளி எனக் கூறப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலலிதாதேர்தலில் போட்டியிடலாமா கூடாதா என இரு விதமான வாதங்கள் கூறப்படுகின்றன.
தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கியிருப்பதால் தேர்தலில் போட்டியிடஎந்தத் தடையும் இல்லை என ஜெயலலிதா கூறி வருகின்றார்.
ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுவிட்டதால் அவர் தேர்தலில் நிற்கமுடியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார்.
இதையடுத்து தான் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதே நேரத்தில் ஜெயலலிதா இன்னும் சிறை தண்டனையை அனுபவிக்காததால் தேர்தலில்அவர் நிற்க தடையில்லை எனவும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதா தேர்தலில் நிற்கலாமா இல்லையா என்பதை தேர்தல் கமிஷனும், உச்ச நீதிமன்றமும் தான் முடிவெடுக்கவேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களின் யோசனைகளும் கேட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஜெயலலிதா குறித்து தேர்தல் கமிஷன் இன்று தனது முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications