உதயமானது தமிழ் மக்கள் காங்கிரஸ்
கோவை:
கோவையில் தமிழ் மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சி உதயமானது. காங்கிரசில் இருந்து அதிருப்தியால்வெளியேறிய ஹரிகிருஷ்ணன் இந்த கட்சியைத் துவக்கியுள்ளார்.
கோவையில் அவர் இந்தக் கட்சியைத் துவக்கி வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் காங்கிரஸ் கட்சியின் சேவதளப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்தேன். காங்கிரஸ் கட்சியில்யாருக்குமே உரிய கவுரவம் அளிக்கப்படுவதில்லை. இதனால், ஏற்பட்ட அதிருப்தியில் நான்வெளியேற்றப்பட்டேன்.
அங்கு உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பு கிடையாது. சேவாதளத்திலிருந்து நான் விலகியதால், எனக்குபெரும் ஆதரவு உள்ளது. தற்போது நான் துவக்கியுள்ள தமிழ் மக்கள் காங்கிரசுக்கு 6 லட்சம் உறுப்பினர்கள்உள்ளனர். விரைவில் இதனை 12 லட்சமாக உயர்த்துவேன்.
இன்று துவங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி, மக்களால், மக்களுக்காகத் துவங்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும்இணைவர். நாங்கள் வரும் தேர்தலில் 3 தொகுதிகளில் முதலில் பரிட்சார்த்தமாக போட்டியிடுகிறோம்.
கோவை தொண்டத்தூர் தொகுதியிலும், பேரூர் தொகுதியிலும் போட்டியிடுகிறோம். தொண்டத்தூரில் நான் தான்வேட்பாளர். நகர்கோயிலில் பத்மநாபபுரத்தில் போட்டியிடுகிறோம் என்றார் ஹரிகிருஷ்ணன்.