கிருஷ்ணகிரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெ.
சென்னை:
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல்செய்கிறார்.
இதற்காக சென்னை போயஸ் தோட்டத்திலிருந்து தனது சகல பரிவாரங்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலைகிருஷ்ணகிரி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது உயிர்த்தோழி சசிகலாவும் உடன் சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தேனி மாவட்டம்ஆண்டிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியிலும் போட்டியிடுகிறார்.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
கிருஷ்ணகிரியில் பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யும் அவர் அங்கிருந்து மதுரை செல்கிறார்.மதுரையில் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் துவக்குகிறார்.
தேர்தல் பிரசாரம்:
ஏப்ரல் 18 ம் தேதி முதல் அடுத்த மாதம் 7 ம் தேதி வரை ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். அனைத்துமாவட்டங்களிலும் பிரசாரம் செய்யும் அவர் இறுதியாக அடுத்த மாதம் 7 ம் தேதி சென்னையில் பிரசாரம்செய்கிறார்.
20 நாட்கள் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதால் அவருக்குத் தேவையான பொருட்கள், திறந்த வெளி பிரசாரவேனுடன் கிருஷ்ணகிரி சென்றுள்ளார்.
ஏசி செய்யப்பட்ட 2 மெர்சிடஸ் சுவராஜ் பிரசார வேன்கள், ஒரு திறந்த வெளி பிரசார வாகனமும்ஜெயலலிதாவுடன் சென்றன. அவருடன் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களும் சென்றனர்.
கிருஷ்ணகிரி செல்லுமுன் ஜெயலலிதாவும், அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும் சென்றனர். இவர்கள்போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியே வந்ததும் வீட்டு வேலையாள் ஒருவர் திருஷ்டி தேங்காய் உடைத்தார்.
தமிழ்நாடு ஹோட்டலில் தங்குகிறார்:
கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டலில் தங்குகிறார் ஜெயலலிதா. இதனால் அங்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தங்கும் அறையில் ஏ.சி.உள்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரியும், தர்மபுரி மாவட்ட ஆர்.டி.ஓ.வுமான மதிவாணனிடம் ஜெயலலிதாவேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications