மாறன் விலகியதால் திமுகவுக்கு பாதிப்பில்லை என்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக மாறன் அறிவித்துள்ளது திமுகவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதுஎன்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திமுக மாவட்டத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் நடந்தது.
திமுக கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்ளும் மாறன் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்குப் பிறகு வெளியே வந்த முதல்வரிடம் மாறன் குறித்து கேட்ட கருத்துகளுக்கு பதில்அளித்து அவர் கூறியதாவது:
முரசொலி மாறன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும். அவரது வீட்டு முகவரி தருகிறேன். அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். மாறன் முடிவால் திமுகவில்எந்த பிரச்சனையும் எழவில்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications