ரஷ்யாவில் தமிழ்ப்புத்தாண்டு கோலாகலம்
மாஸ்கோ:
ரஷ்யாவில் வாழும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தமிழ் புத்தாண்டையொட்டி நூற்றுக்கணக்கான தமிழர்கள் மாஸ்கோ பல்கலைகழகத்தின் கலாசார மையத்தில் கூடி2,033வது தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
பெருந்திரளாக ரஷ்யர்களும், அயல்நாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய தமிழர்களும்புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
இந்திய தூதரகத்தைச் சேர்ந்த கப்பற்படை தலைவர் கமடோர் குமார் புத்தாண்டு கொண்டாட்டங்களை துவக்கிவைத்தார். புத்தாண்டில் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என அவர் வாழ்த்தினார்.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவிலிருக்கும் தமிழ் இலக்கிய வல்லுனர் அலெக்சான்டர் துபியான்ஸ்கி கூறுகையில்,இந்த புத்தாண்டு தீபத்துடன், ஒளியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஒளி மிகுந்த ஆண்டாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்கும் ஆண்டாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பல மணிநேரம் இனிமையான இசை நிகழ்சி மக்களை மயங்க வைத்தது. தமிழகத்தின் பாரம்பரிய நடனமானபரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
ரஷ்யாவில் இருந்து வரும் வழக்கப்படி இந்த ஆண்டு ரஷ்யாவில் உயர் படிப்பை முடித்து இந்தியாதிரும்புபவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.