For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீட் கிடைக்காத கோபத்தில் முல்லைவேந்தன்: சமாதானப்படுத்த ஸ்டாலின் முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த வாரம் வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் விடுபட்டிருப்பதைப் பார்த்ததும் மிகவும்அதிர்ச்சியடைந்தார் முல்லைவேந்தன். அவரால் தேர்தல் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாதே என்றுஅவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஸ்டாலின்.

தமிழக சட்டசபைக்கு வரும் மே 10 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக, அதிமுக,மதிமுக கட்சிகள் வெளியிட்டு விட்டன.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் விடுபட்டிருப்பதைக்கண்டதும் முல்லைவேந்தன் கடும் அதிர்ச்சியடைந்தார்.

எதிர்பார்த்தது போலவே அவருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. மொரப்பூரிலும், கிருஷ்ணகிரியிலும்அவரது ஆதரவாளர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட வேண்டியிருக்கிறதே என்று பயத்தில் இருக்கும் திமுகவேட்பாளர் செங்குட்டுவன், இப்போது முல்லைவேந்தனின் கோபத்தால் பிரசாரத்தில் பிரச்சனை ஏற்படும் என்றுகருதுகிறார்.

இதைத்தெரிந்து கொண்ட ஸ்டாலின் முல்லைவேந்தனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X