ஜி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக பறந்தது
சென்னை:
இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தகவல் தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் 36, 000 கிலோமீட்டர் உயரத்தில் ஏவும் திறன் கொண்ட இந்த ராக்கெட்டை இந்தியாவேவடிவமைத்து தயாரித்தது. புதன்கிழமை விண்ணில் பறந்த இந்த ராக்கெட் ஜி-சாட் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கடந்த மாதம் 28 ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நொடியில் ராக்கெட்டின் ஸ்ட்ராப் ஆன் மோட்டாரில்ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை ஏவப்படுவதை கம்ப்யூட்டர் நிறுத்தி விட்டது.
இதையடுத்து கடந்த 18 நாட்களில் விஞ்ஞானிகள் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாரை முற்றிலும் சீரமைத்து இயல்பு நிலைக்குத் திருப்பினர்.
இதையடுத்து புதன்கிழமை மாலை 3.50 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு பெரியமைல்கல்லாகும்.
இத்தகைய ராக்கெட்டுகளை பயன்படுத்தி பூமிக்கு மேலே 1000 கிலோ எடையுள்ள ஜியோ சின்குரோனைஸ்டு சாட்டிலைட் ஒன்றை நிறுத்த 18 மில்லியன்டாலர்கள் முதல் 33 மில்லியன் டாலர்கள் வரை செலவாகிறது.
ஆனால், இஸ்ரோ அமைப்பு ஜியோ சின்குரோனைஸ்டு சாட்டிலைட்களை ஏவ 4 மில்லியன் டாலர்களை மட்டும் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
முந்தைய செய்திகள் :
ஏப்.18 ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி?
ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. மீண்டும் சோதனை?
ஜி.எஸ்.எல்.வியில் தீ பிடித்ததா?
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் பணி தோல்வி
பரபரப்பில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித்தளம்
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்: கவுண்ட்டெளன் தொடங்கியது
ஜி.எஸ்.எல்.வி.: மார்ச் இறுதியில் விண்ணில் பாயும்
விண்ணில் பாய ஜி.எஸ்.எல்.வி. ரெடி