தேவையில்லாமல் திமுகவை விமர்சிக்கிறார் வைகோ: கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுகவை அல்லது மதிமுகவையோ கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டும்என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருக்கோவிலூரில் தேர்தல் பிரசாரம் செய்த கருணாநிதி கூறியதாவது:
தேவையில்லாமல் திமுகவை விமர்சனம் செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக அல்லது மதிமுகவை வைத்துக் கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாயிடம்வலியுறுத்தவுள்ளேன்.
திமுக - மதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால் வைகோஒன்றுமில்லாததைப் பெரிதாக்குகிறார். மதிமுகவுக்கு திமுக 18 தொகுதிகளை முதலில் வழங்கியது.
ஆனால் அதை நிராகரித்தார் வைகோ. அவர் மேலும் 3 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.அப்போது பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கும் நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளதாகக்கூறினோம். ஆனால் அவர்கள் சமாதானமடையவில்லை. பின்னர் 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அப்புறம் வேண்டாத தொகுதிகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.அதனால்தான் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற வேண்டுமானால் வெளியேறிக் கொள்ளலாம் என்றுகூறினோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மதிமுக எதிரணியாக இருந்து கொண்டு, மத்தியில் திமுக இடம்பெற்றுள்ள தேசியஜனநாயகக் கூட்டணியில் மதிமுக நீடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
சமீபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைப்பதே கருணாநிதியின் குறிக்கோள் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்தார். யார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறார்கள் என்பதைப்பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை விமர்சிப்பதை விட, குறை கூறுவதை விட மிக அதிகமாகவிமர்சிக்கிறார் வைகோ.
மதிமுகவில் செய்தித்தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்ததால் வைகோவின்கோபம் இன்னும் அதிகமாகக் கூடி விட்டது என்று பேசினார் கருணாநிதி.
ஐ.ஏ.என்.எஸ்.