அதிமுகவில் சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் தனித்துப்போட்டி
ஈரோடு:
அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் தனித்துப் போட்டியிட முன்னாள் அமைச்சர் துரைராமசாமி முடிவுசெய்துள்ளார். இதற்காக அதிமுகவினரை அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அமைச்சர் பதவி வகித்தவர்துரை ராமசாமி. இவர் வெள்ளக்கோயில் தொகுதியில் செல்வாக்கு நிறைந்தவர்.
இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்சித் தலைமை மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை. ஜெயலலிதாவைச் சுற்றியுள்ள சிலர் செய்த சூழ்ச்சியால்எனக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை.
அவர்கள் பின்னிய சதிவலையால், தகுதி இல்லாத ஒரு வேட்பாளருக்கு இடம் கொடுத்துள்ளனர். எனவே,வேட்பாளரை மறு பரிசீலனை செய்து எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையென்றால், நான்அதிருப்தி வேட்பளாராகப் போட்டியிடவுள்ளேன்.
இதற்காக வெள்ளகோயில், தாராபுரம், ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டியுள்ளேன் என்றார்.
அதிமுகவின் பெரும்பகுதியினரிடையே செல்வாக்கு நிறைந்த துரை ராமசாமி, தனியாக செயல் வீரர் கூட்டத்தைநடத்தியுள்ளார். இதனால், ஈரோடு அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications