களத்தில் குதித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை:
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்தல் களத்தில் குதித்தார். அவரது மக்கள் நல உரிமைக் கழகம்வரும் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அவர் புதன்கிழமைநிருபர்களிடம் வெளியிட்டார்.
சென்னையில் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பண்ருட்டி ராமச்சந்திரன்வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
மக்கள் நல உரிமைக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
1.பண்ருட்டி - பண்ருட்டி ராமச்சந்திரன்.
2.சைதாப்பேட்டை - குணசேகரன்.
3.திருப்பத்தூர் - ராமசாமி.
4.நாட்ராம்பள்ளி - காளகஸ்திரி.
5.அணைக்கட்டு - பார்த்தீபன்.
6.ராணிப்பேட்டை - மணி.
7.மேல்மலையனூர் - ஜெயராமன்.
8.குறிஞ்சிப்பாடி - ராஜேந்திரன்.
9.விருத்தாச்சலம் - பாலகுமார்.
10.சிதம்பரம் - மோகன்.
11.புவனகிரி - சம்சுதீன்.
12.பூம்புகார் - டி.வி.சம்பத்.
13.தலைவாசல் - சின்னச்சாமி.
14.பவானி - பரமசிவம்.
15.அந்தியூர் - குருசாமி.
எங்களது வேட்பாளர்கள் பஸ் சின்னத்தில் போட்டியிடுவார்கள். பண்ருட்டியில் நிான் மீண்டும் வெற்றி பெறுவதுஉறுதி. வள்ளுவர் வழி நடப்போம், வறுமைத் துயர் துடைப்போம் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரனை தி.மு.க அணிக்கு இழுக்கும் முயற்சி நடந்தது.ஆனால் அது வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தானே தனித்துப் போட்டியிட பண்ருட்டி முடிவு செய்து,வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.