பெண்கள் பாதுகாப்பே முக்கியம் .. சங்கரய்யா கூறுகிறார்
சென்னை:
பெண்கள் பாதுகாப்பே எங்களது தலையாய நோக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சங்கரய்யாபேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற எங்களது கட்சி பாடுபடும்.
அதே போல, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற தொடர்ந்துபாடுபடுவோம்.
தொழிலாளர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவையே எங்களது தலையாய நோக்கம். மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து,பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுகவுக்கும், திமுக-பா.ஜ.க. கூட்டணிக்கும் இந்தத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய தலைவர்களான ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சீதாராம் எச்சூரிஆகியோர் தமிழகத்திற்கு வருகின்றனர். சுர்ஜித் 28 முதல் 30 வரையிலும், எச்சூரி, மே 4 முதல் 6 வரையிலும் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபடுவர்.
மதவாத பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிப்பதே முதல் பணி. அதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.எத்தனை சீட்களில் போட்டியிடுகிறோம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை என்றார் சங்கரய்யா.












Click it and Unblock the Notifications