த.மா.க ஓட்டுக்களை தி.மு.க.விற்குப் பெற்றுத் தர சிதம்பரம்முயற்சி
கிருஷ்ணகிரி:
தேர்தல் பிரசாரம் செய்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் அனைத்தையும் திமுகவுக்குப் பெற்றுத்தருவேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவருமானப.சிதம்பம் கூறினார்.
கிருஷ்ணகிரித் தொகுதியில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தபிறகு அங்கு பிரசாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம்பேசியதாவது:
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்புமனுவை தள்ளுபடி செய்ய சதிநடக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசியுள்ளார். அப்படியென்றால், தேர்தல் கமிஷன்மீது அவர் குற்றம் சாட்டுகிறார் என்று தான் அர்த்தம்.
தேர்தல் கமிஷன், ஜனநாயக விதிமுறைகளின் படிதான் அனைவரையும் சரிசமமாக நடத்திக் கொண்டிருக்கிறது.சட்டத்திற்குப் புறம்பாக அது எந்த நிலையிலும் செயலாற்றாது என்பதே உண்மை. தேர்தல் கமிஷனையே குறைகூறுவது எந்தவிதத்திலும் அர்த்தமற்றது.
ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பிறகு தான் நல்லாட்சி வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளோம். அதற்குமுன்னர் அண்ணா, காமராஜர் ஆட்சியின்போது நல்லாட்சி நடந்ததால் நல்லாட்சியைப் பற்றி யாரும் நினைக்கவேஇல்லை.
தமிழ்மாநில காங்கிரசிற்கு ஏற்பட்டுள்ள நிலை மிக மோசமானது. தமிழ் மாநிலக் காங்கிரசின் ஓட்டுக்கள்அத்தனையும் பிரசாரத்தின் மூலம் திமுகவுக்குப் பெற்றுத் தருவேன் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications