வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
மதுரை:
மதுரை அருகே சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் பாலத்தில் தடம்புரண்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.
இரவு 8.15 மணியளவில் ரயில் கொடைரோடு-சோழவந்தான் பொட்டிக்குளம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ரயில் பாலத்திலேயே தடம்புரண்டது.
இஞ்ஜின் உள்பட 5 பெட்டிகள் பாலத்திலேயே தடம்புரண்டன. இதையடுத்து இஞ்சின் உள்பட 5 பெட்டிகள்பாலத்தை விட்டு கீழே இறங்கின. உடனடியாக டிரைவர் பிரேக் போட்டதால் ரயில் பெரும் விபத்தில் இருந்துதப்பியது.
உடனடியாக, ரயில் அங்கிருந்து கிளம்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் பஸ் மூலம்மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் மதுரையிலிருந்தும், அந்த ரயில் பாதையிலிருந்தும் சென்னைக்கு வரவேண்டிய பாண்டியன், முத்துநகர், குமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
புதன்கிழமை காலை வரை அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. சென்னையிலிருந்து புறப்பட்டகன்னியாக்குமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருச்சியில் நிறுத்தப்பட்டன.
ஆங்காங்கே நிற்கும் ரயில்களில் உள்ள பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைவதற்காகரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது.
இந்தநிலையில் வியாழக்கிழமை மாலை முதல் ரயில் போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்பியது. ஜம்முதாவி -மதுரை இணைப்பு ரயில் உள்பட சென்னை செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்க ஆரம்பித்தன.












Click it and Unblock the Notifications