For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற வங்கதேசம்

By Staff
Google Oneindia Tamil News

மாண்கசார் (இந்திய-வங்கதேச எல்லை):

 bsf jawan being taken by bangladeshi mob
இந்திய வீரரை கட்டித் தூக்கிச் செல்லும்
வங்கதேசக் கும்பல்
தான் பிடித்துச் சென்ற 15 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும் அந்நாட்டைச் சேர்ந்த பொது மக்களும் சேர்ந்து கழுத்தை அறுத்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ள கொடூரம்இப்போது தெரியவந்துள்ளது.

இந்த 15 வீரர்களின் உடல்களையும் வங்கதேசம் வெள்ளிக்கிழமை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்த வீரர்களின்உடல்கள் சிதைக்கப்பட்டு, தீக்காயங்களுடன் இருந்தன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குசிதைக்கப்பட்டிருந்தன. கைகளும், கால்களும் வெட்டப்பட்டிருந்தன.

ஒரு வீரரின் உடல் மிக நல்ல நிலையில் இருந்தது. அவரை அப்போது தான் சுட்டு இந்தியாவிடம்ஒப்படைத்துள்ளது வங்கதேசம்.

மேகாலயா மாநிலம் மகேந்திரகஞ்ச் அருகே வைத்து இந்த உடல்களை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.வங்கதேச ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த அதிகாரி கலோனல் சாதிக் இந்த உடல்களை இந்தியாவிடம்ஒப்படைத்தார்.

கடந்த வாரம் இந்த வீரர்கள் இந்திய-வங்கதேச எல்லையில் பரோய்பரி என்ற பகுதியில் ரோந்து சென்றபோதுஅவர்களை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும் 2,000 பேர் கொண்ட வங்கதேச பொது மக்கள் கும்பலும் சேர்ந்துதாக்கி தங்கள் நாட்டு எல்லைக்குள் இழுத்துச் சென்றனர்.

அவர்களை பொது மக்களுடன் சேர்ந்து இந்த ரைபிள்ஸ் படையினர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.கம்புகள், தடிகள், இரும்பு ராடுகளைக் கொண்டு இந்திய வீரர்களை அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியது.

பின்னர் அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். மேலும் 3 வீரர்களின் உடல்களையும்ஒப்படைக்கும்படி வங்கதேசத்திடம் இந்தியா கேட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X