For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் நுழைந்த 24 இலங்கைத் தமிழர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 24 இலங்கைத் தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டனர்.ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு இவர்களை ஏமாற்றியகமிஷன் ஏஜெண்டுகளை போலீசார் தேடுகின்றனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கோரல் பே பகுதியயில் எக்ஸ்மெளத் நகரில் இவர்கள் சாலைகளில் திரிந்தபோதுகைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹெட்லாண்ட் துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

18 முதல் 50 வயது வரையிலான இவர்கள் கடும் குளிர், மழையில் ஒதுங்க இடமின்றி அலைந்து கொண்டிருந்தனர்.இவர்கள் உயிர் பிழைத்ததே அதிசயம் என்ற அளவுக்கு அங்கு காலநிலை நிலவுகிறது.

இவர்கள் இந்தோனேஷியாவிலிருந்து கப்பல் மூலமாக ஆஸ்திரேலியா வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் 4,000ஆஸ்திரேலிய டாலர்களை ஏஜெண்டுகள் வாங்கியுள்ளனர்.

கடும் குளிரில் சிக்கித் தவித்த இவர்கள் குளிர் காய்வதற்காக காயந்த சறுகுகளை வைத்து தீ வைத்தனர். ஆனால்,அந்தத் தீ பக்கத்தில் இருந்த புதர்களுக்குப் பரவி வீடுகளுக்கும் பரவி பெரும் சேதம் விளைவித்துவிட்டது. இவர்கள்மீது இது தொடர்பாகவும் ஆஸிதிரேய போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இவர்களிடம் இமிக்ரேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X