தேயிலை தொழிலாளர்களுக்காக போராடுவோம்: கிருஷ்ணசாமி
கோவை:
தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் நலனிற்காகப் போராடுவேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வால்பாறைஉள்பட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
வால்பாறையில் சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாஞ்சோலை பிரச்னையில் இறந்தவர்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்பதில் எவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது. திமுக ஆட்சி இது குறித்து வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.திமுகவுடன் கொள்கையில் எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது. ஆனால், அதன் செயல்பாடுகளில் தான்முரண்பாடுகள் இருந்து வருகிறது.
நான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடக் காரணம், போதிய வேட்பாளர்கள் இல்லை எனக் கூறுகின்றனர்.ஆனால், அப்படி இல்லை. வால்பாறையில் நான் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராட்டம்நடத்தியுள்ளேன். இங்கு என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனைக் காக்கத்தான் நானேபோட்டியிடுகிறேன்.
கோவை நீலகிரியில் எங்களது கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது நான் இங்கு வெற்றி பெறுவதன் மூலம்நிரூபிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications