வேட்புமனுத்தாக்கல்: இன்றே கடைசி
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 23 ம் தேதி திங்கள்கிழமையுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது.
திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி, சென்னை மேயர் ஸ்டாலின் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள்வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.
இதுவரை 1077 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். தமாகாவில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில்காலதாமதம் ஏற்பட்டதால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்உள்பட பலர் திங்கள்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமைதான் வெளியிடப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர்களும் திங்கள்கிழமையே வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை செய்யப்பட உள்ளதால் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட முடியுமா? இல்லையா? என்பது தெரிந்து விடும்.
முன்னதாக, வேட்புமனுதாக்கல் தொடங்கிய கடந்த 16 ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 18 ம் தேதி ஆண்டிப்பட்டியிலும்வேட்புமனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.