கருணாநிதியின் 2-வது கட்ட பிரசாரம் துவங்கியது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனது 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை சென்னைப் புறநகர் பூந்தமல்லியிலிருந்துசெவ்வாய்க்கிழமை பிற்பகல் துவங்குகிறார்.
கருணாநிதி தனது முதல் கட்டப் பிரசாரத்தை வட மாவட்டங்களில் மேற்கொண்டார். பின்னர் தான் போட்டியிடும்சேப்பாக்கம் தொகுதியில் 2 நாட்கள் பிரசாரம் செய்து முதல் கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதன் இறுதியில்வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
இந் நிலையில், செவ்வாய்க்கிழமை தனது 2-வது கட்டத் தேர்தல் பிரசாரத்தை சென்னையை அடுத்தபூந்தமல்லியிலிருந்து கருணாநிதி துவக்குகிறார். அங்கிருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், காட்பாடி, ஆற்காடு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தின் இறுதியில்வேலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
புதன்கிழமை தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். திமுக தரப்பில் வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.