ரஜினி மன்றத் தலைவரும் பல்டி
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தான் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி ரஜினிகாந்த் இதுவரை எந்தவிதமான கருத்தும்தெரிவிக்கவில்லை என்று அவருடைய செயலாளரும் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவருமான சத்யநாராயணா கூறியுள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை இரண்டு நாட்களில் அறிவிப்பார் என சத்தியநாராயணாகூறியிருந்தார். ஆனால், நேற்று வெளியிட்ட அறிக்கையில் யாருக்கு ஆதரவு என்று ரஜினி தான் முடிவெடுப்பார் என்று மட்டும் தான் கூறியிருந்தேன் என்றுகூறியுள்ளார். 2 நாட்களில் முடிவெடுப்பார் என்றெல்லாம் கூறவில்லை என்று கூறியுளளார்.
1996 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் தி.மு.க அணியை ஆதரித்தார். அப்போது தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினிகாந்த். ஆனால், எதிர்பார்த்தபடி தி.மு.க.அணி அமோகவெற்றி பெறவில்லை. மக்கள் ரஜினி மற்றும் திமுகவுக்கு தோல்வியைக் கொடுத்தனர்.
இதையடுத்து 1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை ரஜினிகாந்த்.
இந்நிலையில் அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ரஜினிகாந்த் இதுவரைதெரிவிக்கவில்லை.
ஆனால், சத்தியநாராயணா தான் ரஜினி 2 நாட்களில் முடிவெடுப்பார் என்றார். திடீரென அப்படிக் கூறவில்லை. பத்திரிக்கைகள் தான் தவறாக செய்திவெளியிட்டுள்ளன என்று கூறியுள்ளார்.