தி.மு.கவை தோற்கடிப்பேன்: அழகிரி சபதம்
மதுரை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜனை தோல்வியுறச் செய்வதே தன்லட்சியம். தி.மு.கவுக்கு எதிராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிப்பேன் என தமிழக முதல்வரும்,தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அழகிரி தனது ஆதரவாளர்களையும், அழகிரி எழுச்சி பேரவைநிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.
ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், கரிமேடு, மணிநகரம், அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர்,கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு அழகிரி சென்ற போது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு மாலை,சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சபாநாயகரை எதிர்த்து நான் பிரசாரம் செய்ய வேண்டியஅவசியமே இல்லை. அவர் தானாகவே தோற்று விடுவார்.
எனது ஆதரவாளர் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை. தென்னரசுவுககுஸ்டாலினின் ஆதரவு தேவையில்லை. அவர் தானாகவே வெற்றி பெறுவார்.
அழகிரி எழுச்சி பேரவை சார்பாக பலர் போட்டியிடுகின்றனர். தி.மு.க.வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும்சுயேட்சை வேட்பாளர்களை பேரவை ஆதரிக்கும்.
போடி தொகுதியில் சுருளி, தேனி தொகுதியில் பிச்சை, கடலாடி தொகுதியில் பிரணவநாதன் ஆகியோர் பேரவைசார்பில் போட்டியிடுகின்றனர்.
நத்தம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.ராமன், திண்டுக்கல்லில் போட்டியிடும் மணிமாறன், மேலூரில்போட்டியிடும் ராஜமாணிக்கம், சோழவந்தானில் போட்டியிடும் துரைச்சாமி, திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும்சூடாமணி ஆகியோருக்கு பேரவை ஆதரவு அளிக்கிறது.
பேரவையின் வளர்ச்சி அமோகமாக உள்ளது. தென்மாவட்டம் முழுவதும் பேரவை துவக்கப்பட்டு வருகிறது.விரைவில் தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் வளர்ச்சி பெறும் என்றார்.
பழனிவேல் ராஜனுக்கு எதிராக செயல்படுவது கழகத்தை பாதிக்காதா என நிருபர்கள் கேட்டபோது, நான்கழகத்திலேயே இல்லை என்னும் போது பழனிவேல் ராஜனுக்கு எதிராக செயல்படுவது எப்படி கழகத்தை பாதிக்கும்.நீங்கள் எந்த கழகத்தை கேட்கிறீர்கள் என பதில் கேள்வி எழுப்பினார்.