For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல்கள் அட்டகாசம்... நிருபர்கள் அறை சூறை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிருபர்கள் அறையில் வக்கீல்கள் வன்முறையில் இறங்கினர். அறையில் இருந்தநாற்காலிகள், சேர்களை வெளியே தூக்கி எறிந்து உடைத்தனர்.

வக்கீல் சங்கத் தலைவர் கருப்பண் நீதிமன்றத்திற்குள் ரகளையில் ஈடுபட்டதால் அவரைக் கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி நாராயணகுரூப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரைத் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்தினர்.

பின்னர் வெளியே அவர் வந்தபோது, உடன் 40 வக்கீல்களும் வந்தனர். திடீரென அவர்கள் நிருபர்கள் அறைக்குள் புகுந்துநாற்காலிகள், சேர்களைத் தூக்கி வெளியே வீசினர். இதையடுத்து பீதியடைந்த நிருபர்கள் வெளியே ஓடினர்.

பின்னர் உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெயராமனிடம் நிருபர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. நடந்த சம்பவத்திற்கு வக்கீல்கள்வருத்தம் தெரிவிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போதுவக்கீல்களின் செயலுக்காக வருத்தப்பட்ட பதிவாளர், தவறு செய்தவர்கள் மீது உரிய நிடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைமை நீதிபதி அதிர்ச்சி: வக்கீல்களின் ரகளை குறித்து தகவல் அறிந்த தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் அதிர்ச்சியடைந்தார்.நிருபர்கள் அறை சூறையாடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X