மே தினம்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
உழைப்பாளர் தினத்தையொட்டி (மே தினம்) தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
மே 1ஆம் தேதி உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்டஉழைப்பாளர்களின் பணிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி: மே தின வாழ்வு அனைவருக்கும் இனித்திட, தன் மேனி வருந்த நாளும் உழைத்திடும் தொழிலாளர் தம் உரிமைகளைநினைந்து, அவர்களின் உயர்வுக்காக திட்டமிட உலகையே சிந்திக்க வைத்த தினம்.
இவ்வேளையில், இந்த ஆண்டின் மேதின விழாவையொட்டி என் உணர்வில் கலந்து நாளும் உவகை அளித்திடும் தொழிலாளர் சமுதாயத்தோழர்களின் வாழ்வு செழித்திட என் இதயங்கனிந்த மேதின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
மூப்பனார்: கோடிக்கணக்கான உழைப்பாளர்களுக்கு இன்னும் சமூக உரிமைகளும், பணிப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. அத்தகையமக்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கச் செய்ய அயராது உழைக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.
இவர்கள் தவிர ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட பல தலைவர்கள் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் வாழ்த்து: பிரதமர் வாஜ்பாய் தனது மே தின வாழ்த்துச் செய்தியில், உழைப்பாளர்கள் அனைவரும் நட்புறவுடன் ஒன்றுபட்டுஉழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.