அன்று சரமாரி வசை .. இன்று பாச மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா காரணமாக சரமாரியாக வசைபாடிக் கொண்ட அம்மா சுலோசனா சம்பத்தும், மகன் இளங்கோவனும், தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டி, பாச மழையைப் பொழிந்தனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்றிருந்த சமயத்தில், கருணாநிதி, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாஆகியோரை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை விட்டிருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன்கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார்.

இளங்கோவனின் அறிக்கையால் கொதித்துப் போன ஜெயலலிதா, அவரது தாயாரான சுலோச்சனா சம்பத்தை விட்டு பதில்அறிக்கை விடச் செய்தார். அந்த அறிக்கையில், தனது மகனின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று சுலோச்சனாசம்பத் கூறியிருந்தார்.

தாயாரின் அறிக்கைக்கு இளங்கோவன் விட்ட பதில் அறிக்கையில் கடுமையாக தாக்கியிருந்தார். அதன் பிறகு தாயும், மகனும்பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை. இந்த நிலையில் வந்தது தேர்தல்.

தி.நகர் தொகுதியில் சுலோச்சனா சம்பத் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் என்றமுறையில் இளங்கோவன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது ஒரே மேடையில், சுலோச்சனா சம்பத்தும், இளங்கோவனும்மகிழ்ச்சி பொங்கக் காணப்பட்டனர்.

எனது பாசமுள்ள தாயும், அதிமுக வேட்பாளருமான சுலோச்சனா சம்பத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களியுங்கள் எனஇளங்கோவனும், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்களே என்று பாசத்துடன் கூப்பிட்டு அங்கு கூடியிருந்தவர்களை புல்லரிக்கவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+