வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: வெள்ளை பேப்பரில் வேட்பாளர் கையெழுத்து
விழுப்புரம்:
கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று மக்களிடம் சொன்னதோடு நிற்காமல் பேப்பரில்எழுதியும் கொடுத்தார் மேல்மலையனூர் தொகுதி அதிமுக பெண் வேட்பாளர் தமிழ்மொழி.
இத்தொகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, பாடிப்பள்ளம், ரோமாபுரி கிராமங்களில்பொதுமக்கள் வேட்பாளரைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
"போன தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.கூட இப்படிக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.தங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை. நீங்கள் புது வாக்குறுதிகளைச் சொல்லிஓட்டு கேட்டு வந்திருக்கிறீர்கள். நாங்கள் எப்படி உங்களை நம்புவது?" என்று கூடிநின்ற பெண்கள் ஆவேசமாகக்கேட்டனர்.
உடனே தமிழ்மொழி அவர்களிடம், "வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்" என்று ஒரு பேப்பரில் எழுதி,கையெழுத்திட்டு அவர்களிடம் ஒப்படைத்தார். மக்களும் உடனே மகிழ்ச்சியடைந்து சந்தோஷத்துடன் அவரைப்பிரசாரம் செய்ய அனுமதித்தனர்.