எத்தனை மணி வரை வாக்களிக்கலாம்?
சென்னை:
எத்தனை மணி வரைக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபைத் தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 4மணிக்கு மேல் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால் சரியாக 4 மணிக்கோ அல்லது 4 மணிக்குள்ளோ வருபவர்கள் முழுவதுமாக வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். வரிசையில் காத்திருக்கும் இந்த வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர் வரிசை எண்கள்இடப்பட்ட சீட்டுக்களை தனது கையொப்பமிட்டு வழங்குவார்.
கடைசியில் உள்ள வாக்காளரில் இருந்து சீட்டு கொடுக்கப்பட்டு முதலில் உள்ளவர் வரை சீட்டு கொடுக்கப்படும்.
இருப்பினும் விரைவிலேயே வந்து தங்களது வாக்குகளை அளிப்பதை வாக்காளர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் சாரங்கி.