ஜெ. மனு தள்ளுபடி சரியானதே .. சொல்கிறார் சோ
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையேஎன்று பத்திரிகையாளர் சோ கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் சமீபத்திய ஆலோசகராக கருதப்படும் சோ இவ்வாறு கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிப்பு விவகாம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சோ புதன்கிழமைசென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜெயலலிதா 4 தொகுதிகளில்முறைகேடாக மனுத்தாக்கல் செய்தது, அவருக்கு 3 ஆண்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ஆகியவற்றைக் காரணம் காட்டிஅவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேர்தல் விதிப்படி சரியானவையே.
கேரள மாநிலத்தில் இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தற்போது எம்.எல்.ஏவாக இருப்பதால் அவரது மனு ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில்இதுபோல முரண்பாடான செயல்பாடுகள் வந்து விடாமல் தடுக்க தேர்தல் கமிஷன் சில நியதிகளை வகுத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால் ஜெயலலிதா முதல்வராகப் பதவிஏற்கலாமா என்று கேட்கிறார்கள். அது போன்ற நிலை ஏற்பட்டால், ஆளுநர், பாரபட்சமற்ற சட்ட வல்லுநர்கள் கொண்ட ஒருகுழுவை அமைத்து அவர்களது ஆலோசனையை ஏற்று யார் முதல்வர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் சோ.












Click it and Unblock the Notifications