தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அகவிலைப்படி 41 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகஅதிகரிக்கப்படும்.
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான அகவிலைப்படி உயர்வுத் தொகை ஊழியர்களின் வருங்காலவைப்புநிதிக் (பிராவிடண்ட் ஃபண்டு) கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த உயர்வுத் தொகையை பொது வைப்புநிதியில் போடும் பொழுது, 1.6.2001 முதல் இதற்கு வட்டியும்வழங்கப்படும். 1.5.2001 முதல் வரும் அகவிலைப்படி சம்பளத்துடன் ரொக்கமாக வழங்கப்படும்.
வைப்புநிதியில் சேர்க்கப்பட்ட பணத்தை 1.5.2002க்குப் பிறகு அட்வான்சாகவோ, பகுதியாகவோ அல்லதுமுழுவதுமாகவோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பகுதிநேர ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தமிழக அரசு உத்தரவில்கூறப்பட்டுள்ளது.