பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட் சாவு
காஞ்சிபுரம்:
பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று, வியாழக்கிழமைதீப்பிடித்து எரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் அதன் பைலட் சஞ்சய் கவுர் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் அருகே இவ்விபத்து நிகழ்ந்தது
பாராசூட் மூலம் சஞ்சய் கவுர் குதித்த போதிலும், பாராசூட் சரியாக விரியாததால், மலைப் பகுதியில் விழுந்து அவர்பலத்த காயமடைந்தார்.
பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 15ஆண்டுகளாக விமானப் படையில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
வண்டலூர் மிருகக்காட்சி அருகே இவ்விபத்து நடந்தது. இருந்தாலும், அதில் உள்ள மிருகங்களுக்கு எந்தவிதப்பாதிப்பும் ஏற்படவில்லை என்று மிருகக்காட்சி சாலை இயக்குநர் தெரிவித்தார்.
தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இவ்விபத்துநேர்ந்ததாகப் போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.