பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுவிப்பு
லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மத்திய அமைச்சர்அத்வானி உள்பட 20 பேர் மீதான விசாரணை கைவிடப்பட்டதாக சிபிஐ தனி நீதிமன்றநீதிபதி அறிவித்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப் பிரதேசம் அயோத்தியில் உள்ளபாபர் மசூதி இடிக்கப்பட்டது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய மந்திரிகள் அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 47 பேர் சிபிஐ-யினால் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, அத்வானி உள்பட 8 பேர் மீது தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சுக்லா வியாழக்கிழமை அறிவித்ததீர்ப்பில்,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மத்திய மந்திரிகள் அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கல்யாண்சிங், சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்பட 21 பேர் மீதான விசாரணைகைவிடப்படுகிறது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 26 பேரும் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதிதனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று கூறியிருந்தார்.உ