காங்கிரஸ் நிலையான ஆட்சி தரும்: கிருஷ்ணா
பாண்டிச்சேரி:
புதுவையில் நிலையான ஆட்சி அமைய காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வியாழக்கிழமை பிரச்சாரம்செய்த போது,
கர்நாடகாவில் கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைத்துள்ளது.
16 மாத காலம் அங்கு நாங்கள் சிறப்பான ஆட்சி அளித்து வருகிறோம்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ஊழலற்ற ஆட்சி நடந்துவருகிறது.
சிறிய மாநிலங்களான பாண்டிச்சேரி, கோவா போன்றவை சேவை செய்வதில் தங்களைஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் செயல்படுத்தி வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளலாம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் முன்னாள்பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும்தான்.
நிலையான ஆட்சி அமைய இத்தேர்தலில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் இதைநன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினையில் நடுவர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகுதான் எந்தமாநிலத்துக்கு எவ்வளவு தண்ணீர் பங்கீடு என்பது பற்றி முடிவு செய்ய இயலும்.
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சரிதான் என்று கில்கூறியுள்ளார். தேர்தல் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகத்தான்இருக்கும் என்று கருதுகிறேன்.
பாண்டிச்சேரி உள்பட 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள், மத்தியில்பாஜக அரசைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications