பத்திரத்தாளில் வாக்குறுதிகளை எழுதிக் கொடுத்த மதிமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சந்திரசேகரன் தன் தேர்தல்வாக்குறுதிகளை 10 ரூபாய் பத்திரத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டார்.
பிறகு அதைப் பிரதிகள் எடுத்து, பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கும் விநியோகம் செய்தார்.
கிராமங்களுக்கப் பாதுகாப்பான குடிநீர், விவசாயிகளுக்கு தங்கு தடையில்லாத மின்சாரச் சேவை உள்படஏராளமான வாக்குறுதிகளை பத்திரத் தாளில் பதிவு செய்தார் இவர். இரண்டு பேர் இதில் சாட்சிக்கையெழுத்திட்டுள்ளனர். முன்னாள் கால்நடைத் துறை அமைச்சரான இவர் ஒரு கால்நடை மருத்துவர் ஆவார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications