For Daily Alerts
Just In
ஊழலை ஒழிப்போம் என்கிறார் வைகோ
தூத்துக்குடி:
வரும் சட்டசபை தேர்தலில் பணபலம், ஊழலை ஒழிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும் போது,
வேதகாம கதைகளில், சிறிய கவனில் வைக்கப்பட்ட கல்லைக் கொண்டுதான் பலம் வாய்ந்த கோலியாத்தை தாவீதுவீழ்த்தினான்.
அதேபோல இத்தேர்தலில் பணபலம், ஊழல் ஆகிய இரண்டு கோலியாத்துக்களையும் மதிமுக வீழ்த்தும்.பாதிக்கப்பட்ட எங்களுக்கு நடுநிலையாளர்கள் அனுதாபம் தெரிவிக்கின்றனர்.
இதுவரை வாக்களிக்காத சுமார் 40 லட்சம் வாக்காளர்களின் பெரும்பாலான ஆதரவு எங்களுக்கே கிடைக்கும்.மதிமுக வெற்றி பெற்றால் இங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.
நாங்கள் மாசற்றவர்கள்; காசற்றவர்கள். நான் என்னுடைய விவாதத்தை உங்கள் முன் வைத்துள்ளேன். தீர்ப்பு எழுதவேண்டியவர்கள் வாக்காளர்களாகிய நீங்கள்தான் என்றார்.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Sunday, May 6, 2001, 5:30 [IST]