தமாகாவில் மீண்டும் இணைய சிதம்பரத்திற்கு அழைப்பு
கோவை:
சிதம்பரம் மனம் திருந்தி மீண்டும் தமாகாவுக்கு வரவேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் அழைப்பு விடுத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமாகா எம்பியும், பொதுச் செயலாளருமான பீட்டர்அல்போன்ஸ் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், வீரமணி முதல்வர் என திருநாவுக்கரசு மற்றும் சுப்பிரமணியசுவாமி ஆகியோர்தவறாகச் சொல்லி மக்களைக் குழப்பமடையச் செய்து வருகின்றனர்.
அதே போல தமாகாவுக்கும் திமுகவுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக வைகோ கூறி வருகிறார். இதுதவறான கருத்து. மதிமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேதான் ரகசிய உறவு இருந்து வருகிறது.
மதவாதக் கட்சிகளின் முகமூடியாக சிதம்பரம் இருக்கிறார். அவர் தனது கொள்கைகளை மறந்து செயல்பட்டுவருகிறார். அவர் மனம் திருந்தி மீண்டும் தமாகாவிற்கு வரவேண்டும்.
மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையால் உள்நாட்டு வியாபாரம் முழுமையாகப் பதிக்கும். அடுத்த 5ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தொடர்ந்தால், நாணயங்களின் முழுவதுமாக மதிப்பை இழந்து விடும்.
அதிமுக ஆட்சி அமைத்தால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏழை எளிய மக்களின்பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றார்.












Click it and Unblock the Notifications