நல்லாட்சி நடக்க திமுகவை ஆதரியுங்கள்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை தொடரவும் புதிய பல திட்டங்கள்தொடங்கவும் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமானகருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் சனிக்கிழமையன்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கருணாநிதிகூறுகையில், திமுக ஆட்சியில் நடந்த சாதனைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எம்எல்ஏவாக வேண்டும் என்றோ முதல்வராக வேண்டும் என்றோ நாங்கள் நினைக்கவில்லை. திமுகவைத் தவிரவேறு எந்த ஒரு அரசும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களைக் கவனிப்பதில் அக்கறை கொள்ளவில்லை.
மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வோடுதான் திமுக அரசுதிட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தொடங்கிய திட்டங்களைத் தொடரவும், மேலும் பல திட்டங்களைத்தொடங்கவும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்.
இந்த அளவோடு விட்டுச் சென்றால், யார் வந்து கூட்டுக் கொள்ளை அடிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.எனவே திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications