காவிரி நீர் பிரச்சனையை விவசாயிகள் தீர்க்க வேண்டும்: கிருஷ்ணா
கோவை:
காவிரி நீர் பிரச்னையை இரண்டு மாநில விவசாயிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும், இதற்காக இரு மாநிலஉறவுகளும் பாதிக்கப்படக் கூடாது என கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாபிரச்சாரம் மேற்கொண்டார். கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காவிரி நீர் பிரச்சனை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்குதீர்வு காண, தமிழக விவசாயிகள் கர்நாடக விவசாயிகளைச் சந்தித்து பேச வேண்டும். வெளிப்படையான இந்தப்பேச்சின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். காவிரிப் பிரச்னையால் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ளஉறவு எந்த விதத்திலும் பாதிப்படையக் கூடாது.
இந்தப் பிரச்னை குறித்து இரு மாநில விவசாயிகளும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தஒப்பந்தத்தை மத்திய அரசுடன் பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்வது பற்றி முடிவு செய்யலாம்.
தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில்தேர்தல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதத்திற்கான ஆதாரத்தை வெளியிட முடியாது.
வட மாநிலங்களில் காங்கிரசுடன் தீவிரவாதிகள் தொடர்புள்ளதாக பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எவ்விதஆதரமும் இல்லை. இந்தியாவைப் பாதிக்கும் இரண்டு விஷயங்கள், மதவாதமும், தீவிரவாதமும் தான்.இதனை ஒழிக்கப் பாடுபடுவோம். தமிழகத்தில் வரும் தேர்தல் முடிவுக்குப் பின் நல்ல நிலை ஏற்படும்.
நளினியை சோனியா காந்தி மன்னித்தது, மனிநேயத்திற்காகத் தான். நளினியை மன்னித்ததால் தீவிரவாதத்தைமன்னித்ததாக அர்த்தம் இல்லை.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தை வைத்துத்தான் பா.ஜ ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், இந்த வழக்கில்,அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சந்தேகம் உள்ளது.
ஜெயலலிதாவின் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து அரசியல், மற்றும் சட்டரீதியாக தீவிர ஆய்வு செய்ய வேண்டும்.இதற்குப் பின்னர் இதில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணா.