இலங்கையில் கடும் சண்டை: 13 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 13 பேர்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
யாழ்ப்பாணத்தில் உள்ள கிலாலி பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 பெண் விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.
நாகர்கோவில் மற்றும் முகமலை பகுதிகளில் மோர்ட்டார் மற்றும் ஆர்ட்டிலரி வெடிகுண்டுகள் வீசி விடுதலைப்புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
அம்பாரா பகுதியில் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் கூட்டு அதிரடிப்படையைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.
ஓம்டாய் பகுதியில் புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள்காயமடைந்தனர் என்று இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.